'கடுமையாக அச்சுறுத்தும் ஜனாதிபதி.. : மாற்று வழிகளை பின்பற்ற நேரிடும் என எச்சரிக்கை"

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதையோ அல்லது சபைகளில் பதவிகளுக்கு வாக்கெடுப்பு நடத்துவதையோ தடுப்பதற்கு ஜனாதிபதியினால் முயற்சிக்கப்படுமாக இருந்தால் அதற்கு எதிராக எங்களால் மாற்று வழிகளை பின்பற்ற நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ர{ஹமான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனைதத் தெரிவித்த அவர்,  

 எதிர்க்கட்சிகள் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைத்தால் அதற்கு இடமளிக்க மாட்டோம் என்று உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.

 இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நாங்கள் அதிக உறுப்பினர்களை வென்றுள்ள சபைகளில் ஆட்சியமைக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்குமாக இருந்தால் மூன்று மாதங்களில் அதனைநீக்கி விடுவதாகவும், பாராளுமன்றத்தில்தமக்கு 159 உறுப்பினர்கள் இருப்பதால் சட்டத்தை மாற்றவும் தயார் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இவ்வாறான நிலைமையில் எதிர்க்கட்சிகள் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை பிடித்தால் தாம் சட்டத்தை திருத்தியாவது அதனை தடுப்போம் என்றும' கூறியுள்ளார்.

முறைமை மாற்றம் செய்வதாக கூறியே ஆட்சிக்கு வந்தனர். ஆனால் கடந்த ஆட்சியாளர்களின் குரல்களை போன்ற குரலே இந்த ஜனாதிபதியிடம் இருந்தும் வருகின்றது. இவ்வாறு ஜனாதிபதி கூற முடியாது.
50 வீதத்திற்கும் அதிகமான ஆசனங்களை அவர்கள் பெற்றிருந்தால் வாக்கெடுப்பு இன்றி தலைவர்களை நியமிக்க முடியும்.

ஆனால் எதிர்க்கட்சிகள் அதிக ஆசனங்களை கொண்டிருக்கும் போது வாக்கெடுப்பு நடத்தலாம். ஆனால் ஜனாதிபதியோ இதனை நிறுத்துவதற்காக அச்சுறுத்தலையா விடுக்கின்றார். இவரின் கருத்து மிகவும் பயங்கரமானது. தமது தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை.

தமது தோல்வி ஏன் என்று ஆராயாது உறுப்பினர்களை அச்சுறுத்தல் விடுக்க முயற்சிக்க கூடாது. ஜனாதிபதியின் இந்தக் கருத்தின்பின்னர் மேலும் 10 வீத வாக்குகள் குறைவடைந்திருக்கும். ஜனாதிபதியின் இந்த கருத்துசட்டத்திற்கும் மேலாக இருப்பதாகவே கருத வேண்டும்.

உள்ளூராட்சித் தேர்தல் முறைமை தவறானமுறைமை என்று கூறுகின்றனர். பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் நாங்கள் இதனைக் கூறினோம். அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் இப்போது அது தவறான முறைமையாக இருந்தாலும் நாட்டின் சட்டத்தை மாற்ற முடியாது. வேண்டுமென்றால்புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டும்.இதனை விடுத்து அச்சுறுத்தல்களை விடுத்துகருத்துக்களை வெளியிட முடியாது.

ஜனாதிபதி கூறுவது போன்று செய்யமுயற்சித்தால் இதற்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்று மாற்று வழிகளை எங்களுக்கும் செய்ய நேரிடும். சட்டத்தின் முன்னால்சகலரும் சமம் என்றால் நீங்கள் சட்டத்திற்கு மேலாக இருக்க முடியாது. அவ்வாறான கருத்துக்களை வெளியிட முடியாது என்பதனை புரிந்துகொள்ளுங்கள் என்றார்.